நாடு முழுவதும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் சம்பள முரண்பாட்டின் 2/3 பெறவும் பிள்ளைகளின் கல்வி உரிமைக்காகவும் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் துணுக்காய் கல்வி வலய ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் நேற்று (12) மாங்குளம் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக அமைதி வழியிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் 2/3 பெரும்பான்மையான சம்பளம் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என்றும் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் கல்வி வலய பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் ஒதுக்கு ஒதுக்கு கல்விக்கு 6 வீதம் ஒதுக்கு, செய் செய் இல்லாமற் செய் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை இல்லாமற் செய், எதற்கு எதற்கு புதிய ஆணைக்குழு எதற்கு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.