நெடுந்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நெடுந்தீவு காவல்நிலையத்துக்கு முன்பாக கொண்டு சென்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது