இன்று (26) ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பதட்ட நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
எனினும், இன்று கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் என்று கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள நிலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.