எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 30 இற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இன்று (26) கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானியின் உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக ”இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க வேண்டாம், உயிர் காக்கும் உபகரணங்களை வைத்துக் கொள்ளுமாறும் மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.