அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு நாளை (28) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பதில் கல்வி அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தரம் 1 இன் சம்பளம் 17,720.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் முழு அரச சேவையினதும் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த சம்பள அதிகரிப்பானது ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன்;, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடன் பெறுவதற்கோ அல்லது பணம் அச்சிடுவதற்கோ திறைசேரியினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.