தங்காலை கடற்பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை உட்கொண்ட 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று(28) இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் கடலில் மிதந்த போத்தல்களை எடுத்து அவற்றை மதுபானம் என நினைத்து 6 மீனவர்கள் இந்த திரவத்தை அருந்தியுள்ளனர்.
அத்துடன் மீன்பிடி படகொன்றிலிருந்த 6 மீனவர்கள் இந்த திரவத்தை அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திரவத்தை அருந்திய நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மின்பிடி படகு தங்காலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்றுள்ளதுடன், படகை வெறோரு படகின் உதவியுடன் கரைக்கு கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை உடனடியாகக் கரைக்குக் கொண்டு வருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.