நாடளாவிய ரீதியில் காலநிலை மாற்றம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கின்றனர். இந்நிலையில் சுகாதார திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது முதியோர் மத்தியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதேபோல சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சலின் தீவிர தன்மை உணரப்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டால் உடனே வைத்தியரின் ஆலோசனையை பெற வேண்டுமென சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.











