கனடாவில் முதல் குரங்கமை நோய் தொற்றாளர் மானிட்டோபா பகுதியில் பதிவாகியுள்ளதாக கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் பொது மக்களுக்கு இந் நோய் தொற்று பரவக்கூடிய அபாயங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை நோயாளர்கள் அதிகம் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.











