பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.