வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7 ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவரும், சான்று படுத்தப்பட்ட வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இது புயலா, காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 9, 10 ,11 ,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் 9 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.