EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெப்பு.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெப்பு.

மார்கழி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் வைத்தியசாலை அருகில் உள்ள கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்படும் மகஜரும் வாசிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன.

அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி வரும் எங்களுக்கும் எமது பிள்ளைகளின் தற்போதைய நிலையறியும் உரிமையும் அதைக்கேட்டுப் போராடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. தடையுத்தரவு, பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரின் விசாரணை, வழக்குத்தாக்கல் செய்தல் என்ற தடைகள் மூலமாக வயோதிபத் தாய்மார்களாகிய எங்களை போராட்டத்திலிருந்து அகற்ற முயற்சிக்கப்படுகிறது.

இலங்கையில் 75 ஆண்டுகளாக தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வி, பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்பு, மொழி, பண்பாட்டிற்கான உரிமை என்பவற்றில் காட்டப்பட்ட பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.

அதன் நியாயத்தன்மையை உணர்ந்த தமிழ் அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமது ஆதரவைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்தார்கள்.

மக்களது ஆதரவு இன்றி போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்க முடியாது என்ற உண்மை போராட்டத்தில் இணைந்திருந்த தரப்புக்கு நன்கு புரியும். உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி சர்வதேசத்தின் உதவியுடன் 2009 மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டது.

அதற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. சுமார் 20,000 மக்கள் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

அரச பயங்கரவாதம் இந்தளவையும் செய்துவிட்டு “கிரிபத்” கொடுத்து தமது வெற்றியைக் கொண்டாடியது. ஆனால் சிங்கள அரசையும் அதன் வாக்குறுதியையும் வேறுவழியின்றி நம்பி சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையிலும், அடிமைகளாக இரகசிய வதை முகாம்களிலும் வாடுகின்றார்கள்.

இவர்களிற்கான நீதிக்காக 2,850 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் மன அழுத்தத்திற்குள்ளாகி இறந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தமக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி கால இழுத்தடிப்புகளை மேற்கோண்டு தமது பதவிக்காலத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். நாம் தற்போது சுதாகரித்துக் கொண்டுள்ளோம். ஆனால் சர்வதேசத்திற்கு அரசின் கபடத்தனம் புரியவில்லை. தற்போது “மாற்றம்” என்ற கோஷத்துடன் புதியவர்கள் ஆட்சியமைத்துள்ளனர்.

அவர்களும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற பரிந்துரையை சில நாட்டின் பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்களுக்கும் அதே கருத்துடைய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

15 வருடங்களாக பல்வேறுபட்ட பெயர்களில் கொண்டுவரப்பட்ட பொறிமுறைகளில் எம் ஈடுபாடு, அங்கு காட்டப்பட்ட உண்மைத்தன்மையின்மை, உதாசீனங்கள் என்பன எமக்கு பலத்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்ததால் நாம் உள்ளகப் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேசப் பொறிமுறையை மட்டும் கோரி நிற்கின்றோம்.

எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்தை நம்பி எம்மை அணுகுபவர்களுக்கே உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மைத்தனத்துடனும், எம்மை அக்கறையுடனும் அணுகுவதாயின் எமக்கு நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

1.எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட , கைது செய்யப்பட்ட ,முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும் , அவர்கள் அனைவரும் உயிருடனும், நல்ல பதவிகளிலும் தற்போதும் உள்ளார்கள். அதுவே காலம்காலமாக ஏமாற்றம்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.

2.எம்மால் செயலற்றது என்று நிரூபிக்கப்பட்ட அலுவலகம் கலைக்கப்பட வேண்டும். ஆணையாளர் அவர்களே, உள்நாட்டு பொறிமுறைகளிலும், சிறிலங்கா அரசிலும் நம்பிக்கை இழந்த நாம் சர்வதேச பொறிமுறையை கோரி 2,850 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

சர்வதேசப் பொறிமுறைக்குத் தேவையான சாட்சிகள் ஐ.நா இன் ஆவணம் திரட்டும் பொறிமுறை மூலம் திரட்டப்பட்டுள்ளது.

எனவே ஆவணத்திரட்டல் தொடரும் அதேநேரம், அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வயோதிபத் தாய்மாராகிய நாமும் இறப்பதற்கு முன் நீதியைப் பெற்றிட உதவுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
அண்மைய செய்திகள்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வைகாசி 19, 2025
யாழில்.  நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…
அண்மைய செய்திகள்

யாழில். நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

வைகாசி 19, 2025
ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் –  சி.வி.கே.சிவஞானம்
அண்மைய செய்திகள்

ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்

வைகாசி 19, 2025
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

வைகாசி 18, 2025
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு
அண்மைய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

வைகாசி 18, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

6 நாட்கள் முன்னர்
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

3 நாட்கள் முன்னர்
கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

6 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 16 மே 2025

4 நாட்கள் முன்னர்
இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கம் அதிகரிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கம் அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In