இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.