EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு

மார்கழி 12, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்றைய தினம் புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் இடம்பெற்ற இந்த “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையப் பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவாணி தலைமையில் நடைபெற்றது.

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பால்நிலை ஆலோசகரும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள தர்மம் நிலையத்தின் பணிப்பாளரும், சட்டவாளருமான நகுலேஸ்வரன் தர்மலிங்கம் ஆகியோர் திறவு உரையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மிக முக்கிய அம்சமாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வு மாநாட்டுத் திறவுரைகளைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் செய்தி மடல் வெளியீடு இடம்பெற்றதுடன், வடக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை முதன்மைப்படுத்துவதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பால்நிலை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் சமூக மட்டப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அரசாங்க அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
அண்மைய செய்திகள்

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

வைகாசி 20, 2025
விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் –  சி.வி.கே.சிவஞானம்

ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்

2 நாட்கள் முன்னர்
இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

5 நாட்கள் முன்னர்
மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

3 நாட்கள் முன்னர்
AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

3 நாட்கள் முன்னர்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In