EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கட்சியின் பேச்சாளர்  நானே என்கின்றார் சிறிநேசன் எம்.பி

கட்சியின் பேச்சாளர் நானே என்கின்றார் சிறிநேசன் எம்.பி

மார்கழி 14, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கடந்த தேர்தலில் கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை. நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தன. ஆனாலும் ஒரு விடயம் ஆராயப்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.அந்த கடிதத்தை மாவை சேனாதராஜா ஐயா அவர்கள் அனுப்பியதன் பின்னர் பதவி விலகல் கடிதத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக சொல்லியிருந்தார். மீண்டும் தலைவராக இருப்பதற்கான சம்மதத்தை தெரிவித்து இருந்தார்.

அது தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் அவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும், கடிதம் கொடுத்ததன் பிரகாரம் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.

ஒரு ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் அந்த வாதப் பிரதி வாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலையில் இரு தரபபு கருத்துக்களும் இருந்தன. ஜனநாயக ரீதியாக இதனை பார்க்க வேண்டியிருந்தது. இதனால் பதவி விலகளை உடனடியாக உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து மீண்டும் கூட்டம் ஒன்றை கூட்டி தலைவர் யார் என்று முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

தேர்தலில ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி பேசப்பட்டது. இதற்கு பதவி விலகல் ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் இன்னும் பல காரணங்கள இருந்தன. அதனை சுயாதீனமான, நடு நிலமையான ஆய்வு குழு மூலம் ஆராய்ந்து அறிக்கை படுத்திய பின்னர் தான் கருத்து கூற முடியும். ஒவ்வொருவரது கருத்துகளும் சுயம் சார்ந்து இருக்கின்றன. ஆய்வுக் குழு மூலம் அதனை மேறகொண்டால் அது பயன் உள்ளதாக அமையும்.

தமிழரசு கட்சி தலைவர் விடயம் முக்கியம் பெற்று இருந்தமையால வேறு விடயங்கள் குறித்து பேச முடியாது போனது. இதற்கு விரைவில் முடிவு எடுத்து விட்டு தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து பேச வேண்யுளளது. கடந்த தேர்தலில் கட்சிகளில் இருந்து விலகி தோதலில் போட்டியிட்டவர்களுககு என்ன நடவடிக்கை எடுப்பது என்ற ஒரு கருத்தும் பேசப்பட்டது. சிலரது கருத்து அவர்களை கட்சி அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்பது. இருந்தாலும் அந்த கருத்து ஏகமனதான கருத்தாக இருக்கவில்லை. அதிருப்தியின் காரணமாக வெளியேறிச் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அந்த அதிருப்திகளுக்கு என்ன காரணம் என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆய்வு குழுவின் மூலம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் முடிவு எடுக்கப்படும்.

அத்துடன், பாராளுமன்ற குழுவில் என்னை பேச்சாளராக அறிவித்துள்ளார்கள். அதனால் எமது கட்சியின் கருத்தியல் பற்றி நான் சொல்ல வேண்டியுள்ளது. அதனை நான் செய்கின்றேன். கட்சி கூட்ட கருத்துக்களையும், பாராளுமன்ற கருத்துக்களையும் வெளியிடுவது என்னுடைய பணியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…
இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

வைகாசி 13, 2025
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அண்மைய செய்திகள்

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வைகாசி 13, 2025
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….
இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

வைகாசி 13, 2025
யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

வைகாசி 13, 2025
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…
இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வைகாசி 12, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வைகாசி 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

3 நாட்கள் முன்னர்
ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி அமோகமாகி இருக்கும் – ரணில்

7 நாட்கள் முன்னர்
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

2 நாட்கள் முன்னர்
வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மக்கள் ஆர்பாட்டம்…

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மக்கள் ஆர்பாட்டம்…

6 நாட்கள் முன்னர்
யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In