இமாலயப் பிரகடனத்தை சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாநாடு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் இமால பிரகடனத்தில் கையொப்பமிட்ட வண.சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், பிரதம சங்கநாயக தேரர், வண கலுபஹன பியரதன நாயக தேரர்,வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், பிரதம சங்கநாயக தேரர் மத்திய மாகாணம், வண. வலதர சோபித நாயக தேரர், வேலுப்பிள்ளை குகனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இமாலய பிரகடனம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் தெளிவுபடுத்தி பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர்.