வௌிநாட்டு பிரஜைகள் சிலருடன் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் பயணித்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மியன்மார் படகு இன்று(20) அதிகாலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
படகிலிருந்தவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளை கடற்படை வழங்குவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் பிரஜைகள் என சந்தேகிக்கப்படும் 102 பேர் குறித்த படகில் உள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார். இவர்களுள் 25 சிறுவர்களும் 30 பெண்களும் அடங்குகின்றனர்.