மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசெயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியேயாகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசததிற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்பட்டடையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை பொலிசார் கைது செய்யவில்லை இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிசார் சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கைது செய் கைது செய் தாக்கிய வரை, அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய், கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா, அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு, போன்ற வாசகங்களை கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தையடுத்து அங்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் பொலீஸ் நிலைய பொறுப்பாதிகரியிடமும் பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை பொலிசார் வலைவீசி தேடிவருவதாகவும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஆர்பாட்டகாரரிடம் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கடமைகளை செய்தனர்..