மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிசார் நத்தார் பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியில் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை இன்று திங்கட்கிழமை (23) பொலிஸ் நிலையத்தில் வைத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்னா வழங்கி வைத்தார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தலைமையில் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் ஏற்பாட்டில் பொலிஸ் நிலைய பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு உலர் உணவு பொதிவழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்னா, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே. பண்டார, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.