யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நத்தார் தின நிகழ்வு பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் நல்லாயன் இல்ல இயக்குநர் அருட்தந்தை. மைக்டொனால்ட் அடிகளார், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சிரேஸ்ட விரிவுரையாளரும் கலைப்பீட மாணவர் ஒன்றியப் சிரேஸ்ட பொருளாளருமான சு.கபிலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.