EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தனியார் கல்வி நிலையங்களின் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்களின் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மார்கழி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

தனியார் கல்வி நிறுவனங்களின் நேரங்களை மட்டுப்படுத்தியதன் நோக்கமானது பிள்ளைகளை கலை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கேயாகும் யாழ்ப்பாண மாவட்டசெயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட இலக்கிய விழாவானது உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்கள் தமது பாடசாலை பருவத்தில் கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல கலைஞர்களாக உருவாகுவதற்கு வழிவகுக்கின்றது.

அதற்கு இந் நிகழ்வும் எடுகோளாக அமைகின்றது. அதற்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

பிள்ளைகள் தனித்தே புத்தகப் பூச்சிகளாக மட்டும் இருக்காமல், கலை இலக்கியங்களிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் உறுதுணையாகவிருக்க வேண்டும் .

தனியார் கல்வி நிறுவனங்களின் நேரங்களை மட்டுப்படுத்தியதன் நோக்கமானது பிள்ளைகளை கலை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கேயாகும்.

இதன் மூலம் பிள்ளைகளுக்கு மன ஆரோக்கியம் ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் தம் வாழ்க்கையில் நல்ல உயர்வுகளை அடையமுடியும்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டி யில் எமது மூத்த கலைஞர்கள் பங்குபற்றியதும் சிறப்பான விடயம்.

மூத்த கலைஞர்கள் வளரும் கலைஞர்களுக்கு பக்கபலமாகவிருக்க வேண்டும். எமது யாழ்ப்பாண மாவட்டமானது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முதன்மையான மாவட்டம் ஆகும்.

மாவட்ட மற்றும் பிரதேச பண்பாட்டு விழாக்களுக்கு மேலதிகமாக கிராம ரீதியில் கலை இலக்கிய போட்டிகளையும் சிறு விழாக்களையும் நடாத்தி மேன்மேலும் கலைகளை வளர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

அதற்கு மூத்த கலைஞர்கள் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிக அவசியமானது என மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், மாணவர்களின் கதை சொல்லுதல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பாடல் நயத்தல், மற்றும் ஆங்கில கவிதை போன்றவை சிறப்பாக நடைபெற்றதனைத் தொடர்ந்து, கலாச்சார அலுவலக திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

4 நாட்கள் முன்னர்
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

2 நாட்கள் முன்னர்
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

4 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In