தேசிய நடனப் போட்டியில் வெற்றியீட்டிய வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரியில் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று வவுனியா கந்தசாமி கோவில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அண்மையில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான நடனப்போட்டியில் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரி சார்பில் 15 நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்று 12 நிகழ்வுகளில் வெற்றியீட்டியிருந்தனர்.
இம் மாணவர்களை கெளரவிக்கும் முகமாக தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.