காலியில் உள்ள விகாரை ஒன்றில் இன்றையதினம் பெரஹெரா ஊர்வலம் இடம்பெற்றது. தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் ஊர்வலத்தில் யானை ஒன்று குழப்பம் விளைவித்ததில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
யானை தாக்கப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.