கிழக்கு அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கழுத்து பகுதி பாரிய அளவில் காயப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியா கடல் பகுதியில் குறைந்தது நான்கு சுறா தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.