பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானி ஜெனெரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 1 ஆம் திகதியோடு குறித்த பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 2022 மே 31 வரை இராணுவத்தளபதியாக பணியாற்றியதுடன், பின்னர் 2022 ஜூன் முதலாம் திகதி பாதுகாப்புப் படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஷவேந்திர சில்வாவின் சேவைக் காலம் இவ்வருட 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இதன்படி தற்போதைய புதிய அரசாங்கத்தில் இவருடைய ஓய்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.