தற்போது நாட்டிற்க்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் அதிகளவான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்க்கு படையெடுக்கின்றனர்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிட்க்கு சுற்றுலா மேற்க் கொண்டுள்ளதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டின் இறுதி என்பதால் நுவரெலியா கிரகரி வாவி, விக்டோரியா பூங்கா, பிரதான நகர் ஹக்கல பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் ஆகிய இடங்களுக்கே பயணிக்கின்றனர்.
இதனால் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள்,சுற்றுலா வழிகாட்டிகள், வர்த்தகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் மாலை வேளைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.