EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு – நீர் உவராகும் அபாயம்.

யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு – நீர் உவராகும் அபாயம்.

மார்கழி 30, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலையே சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகிறது.

தென்மராட்சியில் குறிப்பாக, மந்துவில், வேம்பிராய் பகுதிகளில் தனியார் ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி, தனது காணிக்குள் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை அவரிடம் வாங்கி அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.

குறித்த தனிநபர்களின் செயப்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன. தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது, அரச காணிகளிலும் தமது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நண்ணீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால், நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்த நிலையில், கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ் . மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ” சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3 மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் குற்றம் சாட்டி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் குறித்த பகுதிகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அகழ்வு பணிகளை இடைநிறுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

ஆனாலும் இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் , தமது பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
அண்மைய செய்திகள்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வைகாசி 19, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கையில் வலுக்கும் கண்டனம்

7 நாட்கள் முன்னர்
இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

5 நாட்கள் முன்னர்
சபைகளைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கொழும்பில் முக்கிய சந்திப்பு

சபைகளைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கொழும்பில் முக்கிய சந்திப்பு

5 நாட்கள் முன்னர்
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

2 நாட்கள் முன்னர்
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

18 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In