EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டு களுவாஞ்சிகுடியில் அடகுவைத்த நகைகளை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற தனியார் நிதி நிறுவன உத்தியோகத்தர்.

மட்டு களுவாஞ்சிகுடியில் அடகுவைத்த நகைகளை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற தனியார் நிதி நிறுவன உத்தியோகத்தர்.

தை 6, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக அங்கு சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்து அவரை தாக்குவதற்கு முற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்திலுள்ள நபர் ஒருபர் தனது பணத்தேவைக்காக க களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நிதி நிறுவனத்தில் அடகுவைத்த தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்று செலுத்தவேண்டிய முதல் அதற்கான வட்டி தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டு வந்துள்ளதாகவும் உடன் அதனை செலுத்துவதாகவும் நகைகளை தருமாறு கேட்டதையடுத்து அங்கு கடமையாற்றியவர் ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள். இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும். திங்கட்கிழமை தருகின்றோம். இப்போது உங்களது நகைகளை தரமுடியாது என கூறியுள்ளார்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளதையடுத்து அந்த நபர் வீட்டுக்குத் திரும்பிய பின்னர் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மீண்டும் சென்று அடகுவைத்த ஆபரணங்களை கேட்டுள்ளார்.

அப்போது அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நகைகளை பெறச் சென்ற நபரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு குறித்த நிதி நிறுவனத்தால் நடந்த அநீதி தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தன்னிடம் மாத்திரமின்றி, இன்னும் பலரிடம் இதேபோன்று அத்துமீறி நடந்து கொண்டதாகவும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை இன்னும் சில நாட்கள் நிறுவனத்தில் வைத்திருந்தால் செலுத்தவேண்டிய வட்டிப் பணத்தொகை அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே நிறுவனத்தினர் நகைகளை திருப்பிக் கொடுக்க தாமதிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்..

இதேவேளை வாழைச்சேனை, கிரான், போன்ற பிரதேசங்களிலுள்ள சில நிதி நிறுவனங்களில் தமது பண தேவைக்காக அடைவு வைத்த தங்க நகைகளை மீட்பதற்கு சென்றால் உடனடியாக அடைவுகளை வழங்காது இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….
அண்மைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….

வைகாசி 23, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
அண்மைய செய்திகள்

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

வைகாசி 23, 2025
வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…
அண்மைய செய்திகள்

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வைகாசி 23, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

வைகாசி 22, 2025
யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….
அண்மைய செய்திகள்

யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….

வைகாசி 22, 2025
அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

1 நாள் முன்னர்
Google Chrome இன் புதிய Update!

Google Chrome இன் புதிய Update!

4 நாட்கள் முன்னர்
AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

6 நாட்கள் முன்னர்
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்
சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In