EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

தை 9, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (9)முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னேற்றப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனிதஉரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடாகும் எனவே ஐக்கியநாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறே சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மனித உரிமைச்சட்டங்களை சர்வதேச வழக்காற்று சட்டங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.

நாடு கடத்தப்படாமை என்பது இந்த அனைத்து சட்டங்களினதும் மையக்கொள்கையாகும் எனவே மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்துமாறும், இந்த அகதிகளின் சொந்த இடத்திற்கு அவர்கள் திருப்பி அனுப்பாதிருக்குமாறும் இலங்கை அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டு வரவேண்டும்.
இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிடமையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்.

மேலும் ஐக்கியநாடுகள் சபையின் ஒத்துழைப்பினை பெறுமாறும் இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்தது வழங்கும் தகமையுடைய நாடுகளிடம் அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறும் கோருகின்றோம் என்றும் அவர்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை கௌரவ பிரதமர் அவர்களுக்கும், வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கும், ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதி அவர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….
அண்மைய செய்திகள்

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….

வைகாசி 23, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
அண்மைய செய்திகள்

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

வைகாசி 23, 2025
வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…
அண்மைய செய்திகள்

வவுனியா மாநாகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்…

வைகாசி 23, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

வைகாசி 22, 2025
யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….
அண்மைய செய்திகள்

யாழிற்கு இலவச நீர் விநியோக திட்டம்….

வைகாசி 22, 2025
அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

2 நாட்கள் முன்னர்
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

யாழில் சிகிச்சை பலனின்றி முதியவரொருவர் உயிரிழப்பு…

1 நாள் முன்னர்
சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

4 நாட்கள் முன்னர்
கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

6 நாட்கள் முன்னர்
மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In