வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
அதன் போது வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.