EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில். வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்.

யாழில். வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்.

தை 17, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மூவர் அடங்கிய கும்பல் ஒன்று சிவில் உடையில் சென்று, தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என கூறி கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொள்ள முதல், கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் எடுத்துக்கொண்டும், கடையின் உரிமையாளர் மற்றும், கடை ஊழியர்களின் தொலைபேசிகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர்.

பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும், கணக்கில் காட்டாத பெருமளவான பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கடையினை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் காணப்பட்ட நகைகள், கடையில் இருந்த 30 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை தாம் எடுத்து செல்வதாகவும் அவற்றினை தமது அலுவலகத்திற்கு வந்து உரிய பற்று சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றினை எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகம் கொண்டு வருவதாக கடை உரிமையாளர் கூறி அவற்றை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்த போது, நகைகளை நீங்கள் கொண்டு வந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள், பணத்தினை நாம் எடுத்து செல்கின்றோம் என கூறி பணத்தினை எடுத்து சென்றுள்ளனர்.

அவர்கள் பணத்தை எடுத்து சென்ற பின்னரே, கடை உரிமையாளர் சக கடை உரிமையாளர்களிடம் கூறிய போதே , வருமான வரி பரிசோதகர்கள் என கூறி வந்த கும்பல் மோசடி கும்பல் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ் . நகர் பகுதியில் பெருமளவான நகைக்கடைகள் உள்ள கஸ்தூரியார் வீதியில் , ஒரு நகைக்கடையில் இவ்வாறான துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
அண்மைய செய்திகள்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வைகாசி 19, 2025
யாழில்.  நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…
அண்மைய செய்திகள்

யாழில். நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

வைகாசி 19, 2025
ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் –  சி.வி.கே.சிவஞானம்
அண்மைய செய்திகள்

ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்த வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்

வைகாசி 19, 2025
மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அண்மைய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்…

வைகாசி 18, 2025
மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….
அண்மைய செய்திகள்

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

வைகாசி 18, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

3 நாட்கள் முன்னர்
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

7 நாட்கள் முன்னர்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

23 மணத்தியாலங்கள் முன்னர்
Samsung இன் புதிய அறிமுகம்!

Samsung இன் புதிய அறிமுகம்!

3 நாட்கள் முன்னர்
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In