அவுஸ்திரேலியாவில் தனது பின்புற தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட “பயங்கரமான” விஷ பாம்புகள் வசித்து வருவதைக் கண்டு ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஸ்டீவன் என்பவரது தோட்டத்திற்குள் 102 சிவப்பு வயிற்றுப் பாம்புகள் இனங்காணப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த ஒரு நாயைப் பாம்பு கடித்ததை அடுத்துத் தேடிய போது இந்தப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாம்புகள் சிவப்பு நிற கழுத்துடன் கருப்பு தோல் போன்ற வடிவத்தில் உள்ளன. பாம்பு பிடிப்பவர்களை அழைத்த பிறகு, நிலைமை “அசாதாரணமானது” என்று பின்னர் அவற்றை அகற்ற உதவுவதாக அவர்கள் ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விஷ பாம்புகள் அங்கு உள்ள ஒரு தேசிய பூங்காவில் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.