நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அனுர கருணாதிலக்கே இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த வௌிப்படுத்தலை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் இன்று இந்த கேள்வியை மீண்டும் எழுப்பினார்.
குரோமியம் அதிக அளவு கொண்ட நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு நீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படாததால், பொதுமக்கள் அச்சமின்றி குழாய் நீரைக் குடிக்கலாம் எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.