கனடிய லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியாளர்களுக்கிடையிலான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் மொழியிலான விவாதம் மொன்றியலில் நடைபெறவுள்ளது.
பிரெஞ்சு மொழியில் நடைபெறவுள்ள விவாதம் எதிர்வருகின்ற பெப்ரவரி 24 திகதியில் ஆங்கில மொழியிலான விவாதம் 25 திகதியும் நடைபெறவுள்ளது,
இந்த விவாத நிகழ்வுகளில் கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, கனடிய முன்னாள் நிதி அமைச்சரும் துணை பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கரினா கோல்ட்ஃ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிராங்க் பேலிஸ் மற்றும் முன்னாள் லிபரல் எம்.பி., ரூபி தல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக லிபெரல் கட்சியின் தலைமைத்துவம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் தலைமைத்துவத்துக்கு போட்டியிடுகின்ற ஐந்து போட்டியாளர்களும் விவாத நிலையில் பங்குபற்றுவார்களா என்பதிலும் உத்தரவாதம் இல்லை, ஏனெனில் விவாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தலைமைத்துவத்துக்கு போட்டியிடுபவர்கள் $350,000 நிதிசேர்ப்பு செய்ய வேண்டும் அதனை நிறைவு செய்யாதவர்கள் தலைமைத்துவ போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.லிபரல் கட்சி தனது அடுத்த தலைவரை மார்ச் 9 அன்று தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.