ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று (12) ஆகும்.
எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றார்.
ஜனாதிபதி இன்று (12) பிற்பகல் உலக அரச உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வில் உரையாற்றவுள்ளார்.
அதன்போது “பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு” என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
இந்த உரையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.