உலகம் முழுவதும் இன்று (February – 14) காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலைர் தினத்தில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசிகளையும் வழங்கு கின்றனர்.
இந்நிலையில் காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நாட்டில் உள்ள பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாகவும், இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவின் தோற்றம் அதிகமாகவும் அழகாகவும் இருப்பதால், அதற்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதேவேளை நுவரெலியா உள்ளூர் ரோஜாவின் அதிகபட்ச விலை 400 ரூபா என்றும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா 300 ரூபாய் என பூக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.