EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பத்திரிசியார் கல்லூரி 175 ஆம் ஆண்டு விழா

பத்திரிசியார் கல்லூரி 175 ஆம் ஆண்டு விழா

மாசி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி, சஞ்சிகை வெளியீடு, பழைய மாணவர்கள் இடையேயான காற்பந்து மற்றும் துடுப்பாட்டப் போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொண்டாட்ட நிகழ்வுகளை நடைபவனி மற்றும் கல்லூரி பரிசளிப்பு விழா என இரண்டு தினங்களையும் அண்மித்து இரண்டு கட்டங்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக இடம்பெறும் நடைபவனியானது கல்லூரிக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைக்காலமாக அதிகளவில் ஏற்படும் தொற்றா நோய்களை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடைபவனியை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நடைபவனியானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் அமைந்துள்ள பத்திரிசியாரின் உருவச் சிலையிலிருந்து ஆரம்பமாகி சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான லோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூலகத்தை அடைந்து அங்கு சிறிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

குறிப்பாக லோங்கினுடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடையவுள்ளதுடன் அங்கு கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது

இந்நிகழ்வுகளில் புலத்திலும் நிலத்திலும் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிக்க கல்லூரி நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…
இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

வைகாசி 13, 2025
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அண்மைய செய்திகள்

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வைகாசி 13, 2025
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….
இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

வைகாசி 13, 2025
யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

வைகாசி 13, 2025
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…
இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வைகாசி 12, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வைகாசி 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

18 மணத்தியாலங்கள் முன்னர்
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

4 நாட்கள் முன்னர்
மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட  ஆசிரியருக்கு   இடம்மாற்றம்…

மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட ஆசிரியருக்கு இடம்மாற்றம்…

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் வெசாக் தன்சல்…

வவுனியாவில் வெசாக் தன்சல்…

2 நாட்கள் முன்னர்
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் சமாதானத்தை விரும்பும்  புலம்பெயர் சமூகம்..

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் சமாதானத்தை விரும்பும் புலம்பெயர் சமூகம்..

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In