துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.