சுவிட்சர்லாந்தில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், உயிரியல் முறையில் தானாகவே கரையக்கூடிய பசுமையான காளான் Batteryயை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு சிறிய சென்சார்கள் மற்றும் வெப்பநிலை கண்காணிப்பான்களை இயக்க பயன்படும்
Living battery என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த Mushroom Battery , செயற்பட்டு முடிந்ததும் நச்சுத்தன்மை இல்லாமல் இயற்கையாகவே கரையக்கூடும்.
முழுமையாக உயிரணுக்களால் செயற்படும் முதல் எரிபொருள் செல்லாக Mushroom Battery அமைந்துள்ளது. சூழலுக்கு மாசுபாடு இல்லாத பசுமையான எரிசக்தி வழியை இது வழங்குகிறது.
முடிவில் தானாகவே கரைந்து சுற்றுச்சூழலை பாதிக்காமல் மறைந்து விடுகிறது. மதிப்புமிக்க இந்த கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த, Mushroom Battery இன் ஆயுள் மற்றும் மின்னோட்டத் திறனை அதிகரிக்க விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.