நாட்டில் நடைபெறுகின்ற தற்கால சூழ்நிலையில் பல தரப்பினரும் அச்சுறுத்தல்களுடனே வாழ்கின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகவியலாளரான சாமுதித சமரவிக்ரம அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாமுதித சமரவிக்ரம அண்மையில் நேர்காணல் செய்த o4 நபர்கள் மித்தேனியா பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தனக்கும் அதிகளவான உயிர் அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவித்து பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஊடகவியாளாலரான சமுதித்த சமரவிக்ரமவுக்கு நான்கு MSD அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவரது பாதுகாப்பை
பதில் ஐ.ஜி.பி உறுதிசெய்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வினவினார். நாட்டில் நீதிபதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.