நாட்டில் நாளைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டையிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரியில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே காணப்படும்.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், குருநாகலிலும் காலை நேரத்தில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.