யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிறீபவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான நியமனத்தினை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறீபவானந்தராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலி வடக்கு, சங்கானை, சண்டிலிப்பாய் , கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.