நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களின் செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.
இதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
மேலும் அவர் இது தொடர்பில் கூறுகையில்..
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான கலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க 533 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க 1.8 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்காக நாமும் நிறைய பணிகளை செய்துள்ளோம் , நாமும் வெளிநாட்டு பயணங்களை மேற்க்கொள்ளவுள்ளோம் எனவே மக்களுக்காக செய்யும் பணிகள் ஒரு போதும் மக்களுக்கு சுமை இன்றி சிறந்த திட்டமிடலுடனே நாம் பணிகளை கொண்டு செல்கின்றோம்.
எனவே வாய் வார்த்தை மட்டுமின்றி செயலில் காட்டுங்கள் என்று கூறியவர்களுக்கு இப்போது செயலில் காட்டியுள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.