கனடாவின் பொருட்கள் மீது அமெரிக்கா மிகப்பெரிய வரிகள் விதிப்பதை கனடா மீண்டும் எதிர்நோக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு வர்த்தகப் போரை தொடங்குவதற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கனடா என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த அனிதா ஆனந்த், மார்ச் 4 ஆம் தேதி முடிவடையும் போது இரு நாடுகளுக்கும் வரிகள் தீங்கு விளைவிக்கும் என கனடா தொடர்ந்து வலியுறுத்துகிறது என தெரிவித்தார் – தேவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவை பொருளாதார ரீதியாக 25 சதவீத வரியுடன் தாக்குவார் எனவும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எங்கள் நிலைப்பட்டு சக்கரத்தில் உறுதியாக இருக்கிறோம். எந்தவொரு நிகழ்வுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும் எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை நாங்கள் பாதுகாப்போம்,” என உள்நாட்டு வர்த்தக அமைச்சர் அனிதா ஆனந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.