ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு ஏமாற்றத்தை தரவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்
நேற்றைய தினம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்
கூட்டணி அமைக்கப்படுவது அவர்களின் உரிமை எனவும் அதனைப்பற்றி தான் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டு செல்ல எவராலும் முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும் என தாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் பிரச்சினையில்லை எனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.