கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் நடவடிக்கை, கனடா நேரப்படி, செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமுலுக்கு வரவிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இதனையடுத்து, டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையின்படி, கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,000 கோடி டாலா் (சுமாா் ரூ.1.74 லட்சம் கோடி) மதிப்பிலான புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா கடந்த மாதம் அறிவித்தது.
மேலும், 8,600 கோடி டாலா் (ரூ.7.48 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் கனடா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து, கனடா பிரதமர் கூறியிருப்பதாவது:
“அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை நள்ளிரவிலிருந்து அமுலாவதைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடி நடவடிக்கையாக, கனடாவில் இறக்குமதியாகும் 155 பில்லியன் டாலர் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கையை (கனடா நேரப்படி)மார்ச் 4 நள்ளிரவு 12.01 மணிமுதல் அமுல்படுத்தும்” என்று கூறியுள்ளார்.