EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு…..

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு…..

பங்குனி 8, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு இன்று நடைபெற்றது.

2023 மார்ச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, 2022 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

பொருளாதார மறுசீரமைப்பை செயற்படுத்தல்,பேரண்ட பொருளாதார ஸ்திரத் தன்மையை வலுப்படுத்தல், ஆபத்திற்கு உள்ளாக கூடிய தரப்பினருக்கு உதவுதல் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கும்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் முகாமைத்துவ பணிப்பாளர், சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவினால் ஒத்துளைப்பு வழங்கப்பட்டது.

உலக பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிக்கொள்ளும் நிலையுடையதாக மாற்றுவதற்கு இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவசியமானதாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும்,பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை முழுமைப்படுத்தல் மற்றும் பிணைமுறி பரிமாற்றம் மற்றும் கடன் மறுசீரமைப்பை சாதகமான முறையில் நிறைவு செய்தமை தொடர்பில் ஜோர்ஜிவா ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறினார்.

முக்கிய மறுசீரமைப்பை முன்னெடுக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முகாமைத்துவ பணிப்பாளர் பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக உலக ஸ்திரமற்ற தன்மையின் உயர்வு, உலக பொருளாதார முன்னேற்றத்தின் மந்த நிலை மற்றும் உலக கடன் மட்டத்தின் உயர்விற்கு மத்தியில் நல்லாட்சி கட்டமைப்புடன் பேரண்ட பொருளாதார நியதிகளையும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜோர்ஜிவா வலியுறுத்தினார்.

இலங்கை மக்களின் வலுவான ஆணையை பிரதிபலிக்கும் வகையில்,சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லவற்கும்,இணக்கம் காணப்பட்ட இலக்குகளை மக்களின் விருப்பத்துக்கு அமைய அடைந்துகொள்வதற்குமான தயார்நிலையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்காக வறியவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான பொறிமுறையை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நலன்புரிச் செலவுகளை வலுப்படுத்தல் என்பவே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விடயங்களாக உள்ளன என்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மின்சார துறை உள்ளிட்டவற்றில் சரியான நிர்வாகம் மற்றும் செலவு – மீளமைத்தல் விலை நிர்ணயத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில் முனைவுகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கடன் அச்சுறுத்தலை குறைத்தல் மற்றும் நிலையான மற்றும் பேரண்ட அபிவிருத்தியை மேம்படுத்த பலதரப்பு கூட்டிணைவுகளின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள மீளாய்வுகளை சாதகமாக நிறைவு செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவிக்கையில்,

எதிர்காலத்தை பார்க்கும்போது, இலங்கையை நிலையான மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கி தீர்மானம் மிக்க வகையில் நகர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை பின்வாங்காமல் செயற்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் உலக அரசியலின் துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிலையான வகையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் செயற்பாடுகளின் சவால்மிகுந்த தன்மையை நான் ஏற்றுக்கொள்வதோடு, இலங்கையின் நிலையான பங்குதாரராக சர்வதேச நாணய நிதியத்தின் வகிபாகத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

அனைத்து துறைகளும் உள்ளடங்கும் அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலுக்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் தயாராக இருக்கிறது என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா மேலும் தெரிவித்தார்.

இலங்கை நிலைப்பேறான ஸ்திரதன்மையை அடைந்துகொள்வது தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருக்கு இடையில் இதன்போது இருதரப்பு ரீதியான இணக்கம் எட்டப்பட்டது.

செழுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுதல் மற்றும் அன்னியோன்னியமாக செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…
இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

வைகாசி 13, 2025
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அண்மைய செய்திகள்

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வைகாசி 13, 2025
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….
இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

வைகாசி 13, 2025
யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

வைகாசி 13, 2025
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…
இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வைகாசி 12, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வைகாசி 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை – ஹரிணி

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை – ஹரிணி

5 நாட்கள் முன்னர்
நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

6 நாட்கள் முன்னர்
WhatsApp 5 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது!

WhatsApp 5 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது!

4 நாட்கள் முன்னர்
யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

5 நாட்கள் முன்னர்
மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவ தேர் பவனி…

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவ தேர் பவனி…

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In