கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் கிராம அலுவலகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 8ம் திகதி மகளீர் தினத்தன்று இடம்பெற்றுள்ளது.
கிராம சேவையாளரிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்ள சென்ற நபர்களிடம் விடயங்களைக் கேட்டு அதனை எழுதிக்கொண்டு இருக்கும் போது சரியான தகவல் கொடுக்காமல் குறித்த கிராம சேவையாளர் மீது குடும்பமே வந்து தாக்கியுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் வந்து வேடிக்கை பார்த்து நின்றதாகவும், முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய நியமனத்தில் கடமையில் ஈடுபட்ட கிராம சேவையாளர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.