EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தொழிற் பயிற்சிகளை பெறவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

தொழிற் பயிற்சிகளை பெறவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

பங்குனி 11, 2025
வகை: Uncategorized
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ.சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் போருக்கு முன்னர் அதிகளவான தொழிற்சாலைகள் இயங்கின. அதன் ஊடாக அதிளவானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.

ஆனால் தற்போது அவ்வாறான தொழிற்சாலைகள் இல்லை. அதனால் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையாக இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களுக்கு ஒரு தொகுதியினரே தெரிவு செய்யப்படுகின்றனர். சிலர் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையிலோ, உயர்தரப் பரீட்சையிலோ சித்தியடையாவிட்டால் அவர்களுக்கும் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான கற்கைநெறிகள் உதவிசெய்யும்.

தொழிற் பயிற்சி அதிகாரசபை ஊடாக கற்கைநெறிகளைக் கற்ற பலர், மேலதிக கற்கைநெறிகளையும் கற்று உயர்நிலைக்கும் வந்திருக்கின்றார்கள். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நல்லதொரு சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.

பல முதலீட்டாளர்கள் எமது மாகாணத்தை நோக்கி வருகின்றார்கள். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் புதிதாக உருவாக இருக்கின்றன.

எனவே இவ்வாறான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நீங்கள் அதில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதேநேரம், இங்கு தற்போது இயங்கும் ஒரு சில தொழிற்சாலைகளும் வேலைக்கு பொருத்தமானவர்கள் தங்களுக்குத் தேவை என்று கூறுகின்றனர். எனவே இங்கு கல்வி கற்று வெளியேறும் நீங்கள் அவ்வாறான தொழில் வாய்ப்புக்களுக்கும் செல்ல முடியும். அதைவிட முக்கியமாக நீங்கள் எதிர்காலத்தில் தொழில் வழங்குனராக மாறவேண்டும்.

அதன் ஊடாகவே, எமது மாகாணத்தை இன்னமும் வளப்படுத்த முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஆளுநர், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். அத்துடன் ஆளுநருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், யாழ். மாவட்டச் செயலர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…
Uncategorized

யாழில். அதீத போதையில் உயிரிழந்த இளைஞன்….

வைகாசி 19, 2025
காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…
Uncategorized

காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

வைகாசி 15, 2025
டெர்ரபோன்  வாக்குப்பதிவின் எண்ணிக்கை முடிவு…
Uncategorized

டெர்ரபோன் வாக்குப்பதிவின் எண்ணிக்கை முடிவு…

வைகாசி 15, 2025
தென்கிழக்கு மனிடோபாவில் பாரிய காட்டுத்தீ
Uncategorized

தென்கிழக்கு மனிடோபாவில் பாரிய காட்டுத்தீ

வைகாசி 15, 2025
கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
Uncategorized

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

வைகாசி 14, 2025
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
Uncategorized

ஐ.பி.எல் . 25025- மும்பைக்கு எதிராக குஜராத் பந்து வீச்சு தெரிவு

வைகாசி 6, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

2 நாட்கள் முன்னர்
Samsung இன் புதிய அறிமுகம்!

Samsung இன் புதிய அறிமுகம்!

3 நாட்கள் முன்னர்
கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

6 நாட்கள் முன்னர்
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் விசாரணை இன்று – அதிபர் ஆசிரியர் சமூகமளிக்காமை தொடர்பில் விளக்கம் கோரி கடிதம்

4 நாட்கள் முன்னர்
செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In