EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பட்டலந்த அறிக்கையை ஆராய விசேட ஜனாதிபதி குழு நியமனம் ….

பட்டலந்த அறிக்கையை ஆராய விசேட ஜனாதிபதி குழு நியமனம் ….

பங்குனி 19, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் பரிசீலித்து பரிந்துரை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் எதிர்வரும் சில நாட்களில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் இந்த அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களை உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

அதனால் இந்த விசாரணை அறிக்கையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், அந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம்.

அதற்கமைய, 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பட்டலந்த வீடடுத்திட்டத்தில் சட்டவிரோத இடங்கள் மற்றும் வதைமுகாம்களை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலனை செய்து பரிந்துரை முன்வைப்பதற்கான குழு நியமிக்கப்படும். இன்னும் சில தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.

மேலும் இந்த அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட மா அதிபர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நீதிமன்றம் மற்றும் சட்டத்துறைக்கான குழு ஆகிய தரப்பினரின் பரிந்துரைகளை உள்ளடக்கி இதுதொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்போம்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு அவசியமான முறைகளை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம்.

இந்த நாட்டில் மேற்கொள்வதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு பதில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே இதற்கு முன்னர் இலங்கையில் ஆட்சியமைக்காத மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

ஆட்சியை பொறுப்பேற்று நான்கு மாதங்களாகின்றன.

எனவே, முதலில் மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.

எனவே மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே முதல் கடமை. கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி உடன் இருவர் கைது

வைகாசி 21, 2025
இஸ்ரேல் ஈரான்  தாக்குதலில் பாதிப்படையும்   எண்ணெய் உற்பத்தி….
அண்மைய செய்திகள்

இஸ்ரேல் ஈரான் தாக்குதலில் பாதிப்படையும் எண்ணெய் உற்பத்தி….

வைகாசி 21, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

வைகாசி 21, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
அண்மைய செய்திகள்

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

வைகாசி 20, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

4 நாட்கள் முன்னர்
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

1 நாள் முன்னர்
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

2 நாட்கள் முன்னர்
மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்…

3 நாட்கள் முன்னர்
மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு….

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In