தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
தந்தை செல்வா அவர்களது 127 வது ஜெயந்தி நிகழ்வு சிறப்பான முறையில் கிளிநொச்சி கூட்டுவு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மேனாள் இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் கௌரவ ஸ்ரீமான் ஆர்.நடராஜான் மற்றும் இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சாய் முரளி, கிளிநொச்சி மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.